search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கருமுட்டை விற்பனை"

    • கருமுட்டை விவகாரம் ஏற்கனவே தமிழகத்தின் பல இடங்களில் பூதாகரமாக பெரிய பிரச்சனைகளை ஏற்படுத்தியது.
    • தற்போது ஓசூரில் தனியார் மருத்துவமனை நிர்வாகம் கருமுட்டையை விற்றுவிட்டதா கணவன், மனைவி மற்றும் அவரது குடும்பத்தினர் குற்றம் சாட்டினர்.

    ஓசூர்:

    கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் தின்னூர் பகுதியை சேர்ந்தவர் சப்தகிரி. இவரது மனைவி சவிதா. இவர்கள் குழந்தை வேண்டி, ஓசூரில் உள்ள ஒரு தனியார் கருத்தரிப்பு மையத்தில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் முதல் குழந்தை கருத்தரிப்புக்காக சிகிச்சை பெற்று வந்துள்ளனர்.

    இதற்காக, அவர்கள் ரூ.3,50,000- வரை செலவு செய்துள்ளனர். கருத்தரிப்புக்காக மருத்துவமனை நிர்வாகத்தினர் சப்தகரியின் விந்தணு மற்றும் சவிதாவின் கருமுட்டை ஆகியவற்றை பெற்று 13 கரு முட்டைகளை வளர்த்துள்ளதாக கூறப்படுகிறது.

    இதில் 3 கருமுட்டைகள் ஆரோக்கியமாக இருப்பதாக கூறி, அதனை கடந்த மாதம் 22 ஆம் தேதி சவிதாவின் கருப்பைக்குள் செலுத்தியுள்ளனர்.

    இந்த நிலையில் நேற்று, கருப்பைக்குள் செலுத்தப்பட்ட கருமுட்டைகள் கருத்தரிக்கவில்லை என டாக்டர்கள், சப்தகிரி தம்பதியிடம் தெரிவித்தனர்.

    இதனால் அதிர்ச்சி அடைந்த கணவன், மனைவி மற்றும் அவர்களது குடும்பத்தினர் 3 கருமுட்டைகளில், 2 கருமுட்டைகள் மட்டும்தான் கருப்பைக்குள் வைக்கப்பட்டது. மீதமுள்ள ஒரு கருமுட்டையை தற்போது கருப்பைக்குள் வையுங்கள், அதன் மூலம் மீண்டும் கருத்தரிக்கலாம் என கேட்டுள்ளனர்.

    அதற்கு மருத்துவமனை நிர்வாகத்தினர் 3 கருமுட்டைகளையும் கருப்பைக்குள் வைத்து கருத்தரிக்க சிகிச்சை அளித்தோம். ஆனால் 3 கருமுட்டைகளும் கருத்தரிக்கவில்லை என கூறியுள்ளனர்.

    அதனை ஏற்க மறுத்த சப்தகிரியின் குடும்பத்தினர், 2 கரு முட்டைகளை மட்டுமே மருத்துவர்கள் கருப்பைக்குள் வைத்துள்ளனர். மீதமிருந்த ஒரு கருமுட்டையை மருத்துவமனை நிர்வாகம் பணத்திற்காக விற்று விட்டதாக ஆவேசமடைந்து டாக்டர்கள் மற்றும் ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

    ஒரு கட்டத்தில் இருதரப்புக்கும் இடையே கைகலப்பும் ஏற்பட்டது. இதனால் அந்த மருத்துவமனை வளாகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்து அங்கு வந்த ஓசூர் டவுன் போலீசார் இரு தரப்பினருடனும் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    மேலும், இதுகுறித்து பாதிக்கப்பட்ட சப்தகிரி, சவிதா ஆகியோர் போலீசில் புகார் அளித்ததன் பேரில் போலீசார் தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கருமுட்டை விவகாரம் ஏற்கனவே தமிழகத்தின் பல இடங்களில் பூதாகரமாக பெரிய பிரச்சனைகளை ஏற்படுத்திய நிலையில், தற்போது ஓசூரில் தனியார் மருத்துவமனை நிர்வாகம் கருமுட்டையை விற்றுவிட்டதா கணவன், மனைவி மற்றும் அவரது குடும்பத்தினர் குற்றம் சாட்டியுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • சிறுமி கருமுட்டை விற்ற விவகாரத்தில் கைதாகி சிறையில் உள்ள சிறுமியின் தாய் உள்பட 4 பேர் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்தது.
    • போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் பரிந்துரையின் பேரில் 4 பேர் மீதும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் கிருஷ்ணனுண்ணி உத்தரவிட்டார்.

    ஈரோடு:

    ஈரோட்டில் 16 வயது சிறுமியிடம் சட்டவிரோதமாக கருமுட்டை எடுக்கப்பட்ட சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக சிறுமியின் தாய், வளர்ப்பு தந்தை, பெண் புரோக்கர் மாலதி, போலி ஆதார் அட்டை தயாரித்து கொடுத்த ஜான் ஆகிய 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

    சிறுமியின் தாய், பெண் புரோக்கர் மாலதி மற்றும் ஆதார் அட்டை போலியாக தயாரித்து கொடுத்த ஜான் ஆகியோர் கோவை சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். சிறுமியின் வளர்ப்பு தந்தை கோபிசெட்டிபாளையம் மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

    இந்த விவகாரம் தொடர்பாக மருத்துவ குழுவினர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள 4 பேரிடமும் தனித்தனியாக விசாரணை நடத்தினர். மேலும் பெண் புரோக்கர் மாலதியை காவலில் எடுத்து விசாரணை நடத்தினர். மேலும் ஆஸ்பத்திரிகளிலும் விசாரணை நடத்தப்பட்டது.

    இந்த விசாரணை அறிக்கையை மருத்துவ குழுவினர் தமிழக அரசிடம் வழங்கினர். இதையடுத்து சிறுமியிடம் சட்ட விரோதமாக கருமுட்டை எடுத்த ஆஸ்பத்திரிகளுக்கு சீல் வைக்கப்பட்டது. இந்த நிலையில் சிறுமி கருமுட்டை விற்ற விவகாரத்தில் கைதாகி சிறையில் உள்ள சிறுமியின் தாய் உள்பட 4 பேர் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்தது.

    இதையடுத்து போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் பரிந்துரையின் பேரில் 4 பேர் மீதும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் கிருஷ்ணனுண்ணி உத்தரவிட்டார். இதுதொடர்பான நகல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள 4 பேரிடமும் வழங்கப்பட்டது.

    • சுதா ஆஸ்பத்திரி பல்துறை ஆஸ்பத்திரியாக செயல்படுவதால் பல்வேறு நோய்களுக்கு சிகிச்சை பெற 94 பேர் உள்நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டு இருந்தனர்.
    • இவர்களில் 46 பேரை உறவினர்கள் ஆம்புலன்சுகள் மூலம் வேறு ஆஸ்பத்திரிகளுக்கு கொண்டு சென்றனர்.

    ஈரோடு:

    ஈரோட்டில் 16 வயது சிறுமியிடம் கருமுட்டை எடுத்த விவகாரம் தொடர்பாக ஈரோடு சுதா ஆஸ்பத்திரிக்கு சீல்வைக்க தமிழக அரசு உத்தரவிட்டது. மேலும் ஆஸ்பத்திரியில் தங்கி சிகிச்சை பெறும் நோயாளிகளை 15 நாட்களுக்குள் வேறு இடங்களுக்கு மாற்றவும் உத்தரவிட்டது.

    இதையடுத்து சுகாதாரத்துறை அதிகாரிகள் சுதா ஆஸ்பத்திரி ஸ்கேன் மையத்துக்கு சீல் வைத்தனர். மேலும் ஆஸ்பத்திரிக்கும் சீல் வைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

    இதையடுத்து ஆஸ்பத்திரி நிர்வாகம் சார்பில் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இதை விசாரணை நடத்திய தனி நீதிபதி, சுதா ஆஸ்பத்திரி ஸ்கேன் மையத்துக்கு வைத்த சீலை உடனடியகை அகற்ற உத்தரவிட்டார்.

    மேலும் புதிய நோயாளிகளை சேர்க்க விதித்த தடையையும் ரத்து செய்தார். அதன்படி சுகாதாரத்துறையினர் சுதா ஆஸ்பத்திரி ஸ்கேன் மையத்துக்கு வைத்த சீலை அகற்றினர்.

    இதற்கிடையே இதை எதிர்த்து தமிழக சுகாதாரத்துறை துறை சார்பில் ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்குநேற்று முன்தினம் விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கை விசாரித்த நீதிபதிகள் சுதா ஆஸ்பத்திரி ஸ்கேன் மையத்துக்கு வைத்த சீலை அகற்ற பிறப்பித்த உத்தரவை ரத்து செய்தனர்.

    இந்த உத்தரவால் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக கூறி ஆஸ்பத்திரியில் பணியாற்றும் ஊழியர்கள் நேற்று முன்தினம் மாலை ஆஸ்பத்திரி முன்பு அமர்ந்து போராட்டம் நடத்தினர். மேலும் சுதா ஆஸ்பத்திரிக்கு சீல்வைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று ஈரோடு மாவட்டத்தில் உள்ள 250-க்கும் மேற்பட்ட தனியார் ஆஸ்பத்திரிகள் மற்றும் அங்கு பணியாற்றும் 800 டாக்டர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதனால் புறநோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்படவில்லை. அதே நேரம் உள்நோயாளிகள் மற்றும் அவசர சிகிச்சை, அவசர அறுவை சிகிச்சைகள் மட்டும் செய்யப்பட்டது.

    இதற்கிடையே ஈரோடு மாவட்ட சுகாதார பணிகள் இணை இயக்குனர் டாக்டர் பிரேமகுமாரி தலைலைமயிலான அதிகாரிகள் நேற்று மாலை சுதா ஆஸ்பத்திரிக்கு சென்றனர்.

    பின்னர் அங்கு 4 அறைகளில் இருந்த 10 ஸ்கேன் எந்திரங்களுக்கும், அறைகளுக்கும் சீல் வைத்தனர். தொடர்ந்து ஸ்கேன் மையங்களுக்கான அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டதற்கான உத்தரவு நகலையும் வழங்கினர். மேலும் ஆஸ்பத்திரிக்கு சீல் வைக்கும் நடவடிக்கையையும் சுகாதாரத்துறையினர் தொடங்கினர்.

    சுதா ஆஸ்பத்திரி பல்துறை ஆஸ்பத்திரியாக செயல்படுவதால் பல்வேறு நோய்களுக்கு சிகிச்சை பெற 94 பேர் உள்நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டு இருந்தனர். இவர்களில் 46 பேரை உறவினர்கள் ஆம்புலன்சுகள் மூலம் வேறு ஆஸ்பத்திரிகளுக்கு கொண்டு சென்றனர்.

    மீதம் உள்ள நோயாளிகளும் வேறு ஆஸ்பத்திரிகளுக்கு கொண்டு செல்லப்பட்டதும் இன்று மாலை அல்லது நாளைக்குள் சுதா ஆஸ்பத்திரிக்கு முற்றிலுமாக சீல் வைக்கப்படுகிறது.

    இதுகுறித்து இந்திய மருத்துவ சங்கத்தின் மாநில தலைவர் அபுல்ஹாசன் கூறியதாவது:-

    டாக்டர்கள் மீதோ, மருத்துவமனை மீதோ தவறு இருந்தால் அதற்கு என்று தனியாக விசாரணை நடத்தி தண்டனை வழங்கலாம். அதை விட்டு விட்டு ஒட்டுமொத்தமாக மருத்துவமனையை மூட சொல்வது நியாயம் இல்லை.

    இந்த உத்தரவை திரும்ப பெற வலியுறுத்தி இந்திய மருத்துவ சங்கம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றம், மற்றும் டெல்லி உச்சநீதிமன்றத்தை அணுக உள்ளோம். இந்திய மருத்துவ சங்கம் அல்லாது பல்வேறு அமைப்புகள் சேர்ந்து இதுகுறித்து கடிதம் எழுத முடிவு செய்துஉள்ளனர். அந்த கடிதத்தை நாங்கள் பெற்று தமிழக அரசுக்கு அனுப்புவோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ஈரோடு மாவட்டத்தில் உள்ள 250 தனியார் ஆஸ்பத்திரிகளில் பணிபுரியும் 800 டாக்டர்கள் இன்று வேலை நிறுத்த போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.
    • வேலை நிறுத்தத்தில் பங்கேற்று உள்ள தனியார் ஆஸ்பத்திரிகளில் புற நோயாளிகளுக்கு மட்டும் சிகிச்சை அளிக்கப்படவில்லை.

    ஈரோடு:

    ஈரோட்டில் 16 வயது சிறுமியிடம் கருமுட்டை பெற்ற விவகாரத்தில் சுதா மருத்துவமனை ஸ்கேன் மையத்துக்கு சீல் வைக்க தமிழக அரசு உத்தரவிட்டது.

    இதையடுத்து மருத்துவக்குழுவினர் சுதா ஆஸ்பத்திரியில் உள்ள ஸ்கேன் மையங்களுக்கு சீல் வைத்தனர். மேலும் ஆஸ்பத்திரியில் புதிய நோயாளிகளை சேர்க்க தடை விதித்தும், சிகிச்சையில் உள்ள நோயாளிகளை 15 நாட்களுக்குள் அனுப்பவும் உத்தரவிட்டனர்.

    இதை எதிர்த்து மருத்துவமனை நிர்வாகத்தினர் சென்னை ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்தனர். இதை விசாரித்த தனி நீதிபதி சுதா ஆஸ்பத்திரி ஸ்கேன் மையத்துக்கு வைத்த சீலை உடனடியாக அகற்ற உத்தரவிட்டார். இதனை அடுத்து மருத்துவமனை வழக்கம் போல் செயல்பட்டு வந்தது.

    இந்நிலையில் தமிழக அரசு ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்தது. இதை விசாரித்த ஐகோர்ட் சுதா ஆஸ்பத்திரி ஸ்கேன் மையத்தில் சீல் அகற்ற பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து மீண்டும் சீல் வைக்க உத்தரவிட்டது.

    சுதா மருத்துவமனையில் டாக்டர்கள், ஊழியர்கள், பணியாளர்கள் என நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இந்த உத்தரவால் அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். தங்களுடைய வாழ்வாதாரத்தை பாதுகாக்க வலியுறுத்தி திடீரென அவர்கள் மருத்துவமனை முன்பு நேற்று இரவு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுதொடர்பாக டவுன் டி.எஸ்.பி. ஆனந்தகுமார் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதனால் நேற்று இரவு சுதா மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

    இந்நிலையில் சுதா மருத்துவமனைக்கு சீல் வைக்க எதிர்ப்பு தெரிவித்து இந்திய மருத்துவ சங்கத்தின் ஈரோடு கிளை சார்பில் இன்று ஒரு நாள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்யப்பட்டது. அதன்படி ஈரோடு மாவட்டத்தில் உள்ள 250 தனியார் ஆஸ்பத்திரிகளில் பணிபுரியும் 800 டாக்டர்கள் இன்று வேலை நிறுத்த போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர். இது தொடர்பான அறிவிப்பு அந்தந்த ஆஸ்பத்திரியின் முன்பு வைக்கப்பட்டுள்ளது. இன்று வேலை நிறுத்தத்தில் பங்கேற்று உள்ள தனியார் ஆஸ்பத்திரிகளில் புற நோயாளிகளுக்கு மட்டும் சிகிச்சை அளிக்கப்படவில்லை. அதே நேரத்தில் ஆஸ்பத்திரியில் தங்கி சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளுக்கு வழக்கம் போல் சிகிச்சை அளிக்கப்பட்டன. மேலும் அவசரகால சிகிச்சைகள், அறுவை சிகிச்சைகள் வழக்கம் போல் நடைபெற்றன.

    இது தொடர்பாக இந்திய மருத்துவ சங்கத்தின் தேசிய தலைவர் டாக்டர் சி.என். ராஜா கூறியதாவது:-

    சுதா மருத்துவமனை 40 ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கி வருகிறது. இதில் ஏராளமான நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். பல்துறை மருத்துவமனையாக உள்ள நிலையில் ஒரு பிரிவில் தவறு நடந்ததாக கூறப்படும் நிலையில் மருத்துவமனைக்கு சீல் வைப்பது என்பது ஏற்புடையதல்ல.

    இந்த நடவடிக்கையை கண்டித்து ஈரோடு மாவட்டத்தில் உள்ள தனியார் மருத்துவமனைகள் அனைத்தும் இன்று ஒரு நாள் மூடப்படும். புறநோயாளிகள் பிரிவு செயல்படாது. இது தொடர்பாக மாநில அளவில் போராட்டம் நடத்துவது குறித்து இன்னும் இரண்டு நாட்களில் முடிவு எடுக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • மருத்துவம் மற்றும் சுகாதார பணிகள் துறை சார்பில் சம்மந்தப்பட்ட ஆஸ்பத்திரியில் சிறுமியிடம் 9 முறை கருமுட்டை எடுத்ததாகவும் இதன் அடிப்படையில் நடவடிக்கை எடுத்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.
    • சுதா ஆஸ்பத்திரி ஸ்கேன் மையத்துக்கு வைக்கப்பட்ட சீலை அகற்ற பிறப்பித்த தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்து தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு உத்தரவிட்டது.

    சென்னை:

    ஈரோட்டை சேர்ந்த 16 வயது சிறுமியிடம் கருமுட்டை எடுத்தது தொடர்பாக ஈரோடு, சேலத்தில் உள்ள சுதா ஆஸ்பத்திரி, பெருந்துறை, ஓசூரில் உள்ள 2 தனியார் ஆஸ்பத்திரிகள் உள்பட 4 ஆஸ்பத்திரிகள் மீது தமிழக அரசு நடவடிக்கை எடுத்தது.

    மேலும் இந்த ஆஸ்பத்திரிகளில் செயல்படும் ஸ்கேன் மையத்துக்கு சீல் வைக்கவும், ஆஸ்பத்திரி மீது நடவடிக்கை எடுக்கவும் சுகாதாரத்துறை சார்பில் உத்தரவிடப்பட்டது.

    இதையடுத்து கடந்த சில நாட்களுக்கு முன்பு ஈரோடு சுதா ஆஸ்பத்திரி ஸ்கேன் மையத்துக்கு மருத்துவ குழுவினர் சீல் வைத்தனர். மேலும் பெருந்துறையில் உள்ள மருத்துவமனை ஸ்கேன் மையத்துக்கும் சீல் வைக்கப்பட்டது.

    இதை எதிர்த்து சுதா ஆஸ்பத்திரி சார்பில் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இதை விசாரித்த தனி நீதிபதி சுதா ஆஸ்பத்திரி ஸ்கேன் மையத்துக்கு வைத்த சீலை உடனடியாக அகற்ற உத்தரவிட்டும், மருத்துவமனையில் புதிய நோயாளிகளை சேர்க்க விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்கியும் உத்தரவிட்டார்.

    இதை எதிர்த்து மருத்துவம் மற்றும் சுகாதார பணிகள் துறை சார்பில் ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கு தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மருத்துவம் மற்றும் சுகாதார பணிகள் துறை சார்பில் சம்மந்தப்பட்ட ஆஸ்பத்திரியில் சிறுமியிடம் 9 முறை கருமுட்டை எடுத்ததாகவும் இதன் அடிப்படையில் நடவடிக்கை எடுத்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.

    இதையடுத்து சுதா ஆஸ்பத்திரி ஸ்கேன் மையத்துக்கு வைக்கப்பட்ட சீலை அகற்ற பிறப்பித்த தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்து தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு உத்தரவிட்டது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ஈரோடு தனியார் ஆஸ்பத்திரி ஸ்கேன் மையத்துக்கு வைத்த சீலை அகற்ற ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
    • மேலும் புதிதாக நோயாளிகள் சேர்க்க விதிக்கப்பட்டிருந்த தடையும் ரத்து செய்து உத்தரவிடப்பட்டது.

    சென்னை:

    ஈரோட்டில் 16 வயது சிறுமியிடம் கருமுட்டை எடுத்தது தொடர்பாக ஈரோடு, சேலம், ஓசூரில் உள்ள 4 ஆஸ்பத்திரிகள் மீது நடவடிக்கை எடுக்க சுகாதாரத்துறை உத்தரவிட்டது.

    இதையடுத்து கடந்த சில நாட்களுக்கு முன்பு ஈரோடு சுதா ஆஸ்பத்திரி ஸ்கேன் மையத்துக்கு மருத்துவ குழுவினர் சீல் வைத்தனர். மேலும் பெருந்துறையில் உள்ள ராம்பிரசாத் மருத்துவமனை ஸ்கேன் மையத்துக்கும் சீல் வைத்தனர்.

    இதுதொடர்பாக சுதா ஆஸ்பத்திரி நிர்வாகம் சார்பில் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் இன்று சுதா ஆஸ்பத்திரி ஸ்கேன் மையத்துக்கு வைத்த சீலை அகற்ற உத்தரவிடப்பட்டது. மேலும் புதிதாக நோயாளிகள் சேர்க்க விதிக்கப்பட்டிருந்த தடையும் ரத்து செய்து உத்தரவிடப்பட்டது.

    மேலும் தனியார் ஆஸ்பத்திரி சார்பில் விளக்கம் அளிக்க கால அவகாசம் அளிக்க வேண்டும் என்று கூறி மீண்டும் 12 வாரங்களுக்குள் இதுகுறித்து விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டது.

    • சிறுமியிடம் இருந்து 8 முறைக்கு மேல் கருமுட்டை எடுக்கப்பட்டுள்ளது.
    • ஆஸ்பத்திரியில் உள் நோயாளிகளாக சிகிச்சை பெற்று வருபவர்களை 15 நாட்களில் மாற்று ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்க உத்தரவிடப்பட்டு உள்ளது.

    ஈரோடு:

    ஈரோட்டில் 16 வயது சிறுமியின் கருமுட்டையை போலி ஆதார் கார்டு மூலம் பெற்றோரே, பெண் புரோக்கர் மூலம் தனியார் ஆஸ்பத்திரிகளில் விற்பனை செய்த விவகாரம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    இதுகுறித்து ஈரோடு சூரம்பட்டி போலீசார் பாதிக்கப்பட்ட சிறுமியிடம் விசாரணை நடத்தியதில் சிறுமியை வளர்ப்பு தந்தையே பாலியல் பலாத்காரம் செய்ததும் இதற்கு உடந்தையாக அவரது தாய் இருந்ததும் தெரியவந்தது.

    மேலும் சிறுமியின் கருமுட்டையை ஈரோடு, பெருந்துறை மட்டும் அல்லாது சேலம், ஓசூர், ஆந்திர மாநிலம் திருப்பதி, கேரளா மாநிலம் திருவனந்தபுரம் ஆகிய பகுதிகளில் இயங்கும் தனியார் ஆஸ்பத்திரிகளில் விற்பனை செய்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.

    இவ்வாறாக சிறுமியிடம் இருந்து 8 முறைக்கு மேல் கருமுட்டை எடுக்கப்பட்டுள்ளது. இதில் கிடைக்கும் பணத்தை கொண்டு சிறுமியின் தாய், வளர்ப்பு தந்தை உல்லாச வாழ்க்கை வாழ்ந்துள்ளனர்.

    இதையடுத்து போலீசார் சிறுமியின் தாய், வளா்ப்பு தந்தை, புரோக்கராக செயல்பட்ட மாலதி, போலி ஆதார் அட்டை தயாரித்து கொடுத்த டிரைவர் ஜான் உட்பட 4 பேர் மீது போக்சோ உள்ளிட்ட 7 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிந்து கைது செய்தனர். இச்சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இதுதொடர்பாக உயர்மட்ட மருத்துவ குழு டாக்டர் விஸ்வநாதன் தலைமையில் ஈரோடு வந்து, பாதிக்கப்பட்ட சிறுமியிடமும், சம்பந்தப்பட்ட தனியார் மருத்துவமனைகளிடமும் நேரடியாக விசாரணை நடத்தினர்.

    இதற்கிடையில் மாவட்ட காவல் துறை சார்பில், ஈரோடு ஏ.டி.எஸ்.பி கனகேஸ்வரி தலைமையில் தனி விசாரணை நடந்து வருகிறது. ஈரோடு, பெருந்துறை பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனை நிர்வாகிகள், மருத்துவர்கள், ஊழியர்களிடம் தனித்தனியாக விசாரணை நடத்தி முடித்துள்ளனர்.

    சிறுமியிடம் கரு முட்டை எடுத்தது தொடர்பாக சேலம், ஓசூர், கேரள மாநிலம் திருவனந்தபுரம், ஆந்திர மாநிலம் திருப்பதி ஆகிய இடங்களில் இயங்கும் தனியார் ஆஸ்பத்திரி நிர்வாகிகள், மருத்துவர்கள் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க ஈரோடு போலீசார் சம்மன் அனுப்பி விசாரணை நடத்தினர்.

    இதையடுத்து டாக்டர் விசுவநாதன் தலைமையிலான அதிகாரிகள் ஜெயிலில் இருக்கும் சிறுமியின் தாய் ,வளர்ப்பு தந்தை, புரோக்கர், போலி ஆவணங்கள் தயாரித்து கொடுத்தவர் என நான்கு பேரிடமும் நேரடியாக சிறைக்கு சென்று விசாரணை நடத்தினர். இந்த விசாரணை அறிக்கை அனைத்தும் அரசுக்கு தாக்கல் செய்யப்பட்டது.

    அதன் அடிப்படையில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் சென்னையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது 16 வயது சிறுமியிடம் சட்டத்துக்கு புறம்பாக கருமுட்டை பெற்றது உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதுதொடர்பாக ஈரோடு, சேலத்தில் உள்ள சுதா ஆஸ்பத்திரி, பெருந்துறையில் உள்ள ராம் பிரசாத் ஆஸ்பத்திரி மற்றும் ஓசூர் விஜய் ஆஸ்பத்திரி ஆகிய நான்கு ஆஸ்பத்திரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவித்தார்.

    இந்த ஆஸ்பத்திரிகளில் உள்ள ஸ்கேன் மையம் உடனடியாக சீல் வைக்கப்படும் எனவும், நோயாளிகளை 15 நாட்களுக்குள் வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அறிவித்தார்.

    இதன்படி நேற்று ஈரோடு மாவட்ட மருத்துவ மற்றும் நலப்பணிகள் இணை இயக்குனர் (பொறுப்பு) டாக்டர் பிரேம குமாரி தலைமையில் குடும்ப நல துணை இயக்குனர் டாக்டர் ராஜசேகரன், ஈரோடு தாசில்தார் பாலசுப்பிரமணியம், வீரப்பன் சத்திரம் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) நிர்மலா மற்றும் அதிகாரிகள் சுதா ஆஸ்பத்திரியில் ஸ்கேன் மையத்துக்கு சீல் வைக்கும் நடவடிக்கைகள் மேற்கொண்டனர்.

    மதியம் 2 மணி அளவில் மருத்துவக் குழுவினர் சுதா மருத்துவமனைக்கு சென்றனர். அங்கு ஸ்கேன் கருவிகளை அதிகாரிகள் பார்வையிட்டனர். ஸ்கேன் மையத்தில் உள்ள ஆவணங்களை ஆய்வு செய்தனர். இந்த பணி இரவு முழுவதும் நடந்தது. மொத்தம் 5 ஸ்கேன் கருவி மையத்திற்கும் அதன் அறைக்கும் அதிகாரிகள் சீல் வைத்தனர்.

    நேற்று மதியம் தொடங்கிய இந்த பணி அதிகாலை 3.30 மணி வரை விடிய விடிய நீடித்தது. அதனைத் தொடர்ந்து அதிகாரிகள் அங்கிருந்து கிளம்பி சென்றனர். இந்த ஆஸ்பத்திரியில் உள் நோயாளிகளாக சிகிச்சை பெற்று வருபவர்களை 15 நாட்களில் மாற்று ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்க உத்தரவிடப்பட்டு உள்ளது.

    எனவே 15 நாட்கள் கால கெடு முடிந்த பிறகு மீண்டும் குழுவினர் இங்கு வந்து ஆஸ்பத்திரிக்கு சீல் வைக்கும் நடவடிக்கையில் ஈடுபடுவார்கள். இதைத் தொடர்ந்து புகாருக்கு உள்ளான மற்றொரு ஆஸ்பத்திரியான பெருந்துறையில் உள்ள ராம்பிரசாத் ஆஸ்பத்திரிக்கு இன்று ஈரோடு மாவட்ட மருத்துவம் மற்றும் நலப்பணிகள் இணை இயக்குனர் (பொறுப்பு) டாக்டர் பிரேம குமாரி தலைமையில் குழுவினர் சென்று அங்குள்ள ஸ்கேன் மையத்துக்கு சீல் வைக்கும் நடவடிக்கையில் ஈடுபட உள்ளனர்.

    இதேப்போல் அங்கு தங்கி சிகிச்சை பெறும் நோயாளிகளை 15 நாட்களுக்குள் வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    • பாதிக்கப்பட்ட சிறுமி சித்தோடு அருகே உள்ள ஆர்.என்.புதூரில் உள்ள அரசு காப்பகத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளார்.
    • கோபி சிறையில் உள்ள சிறுமியின் வளர்ப்பு தந்தை, டிரைவர் ஜான் ஆகியோரிடமும் தனித்தனியாக மருத்துவ குழுவினர் விசாரணை நடத்த உள்ளனர்.

    ஈரோடு:

    ஈரோட்டில் 16 வயது சிறுமியை தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்று சட்ட விரோதமாக கருமுட்டை எடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இந்த விவகாரத்தில் சிறுமியின் தாய், வளர்ப்பு தந்தை, பெண் புரோக்கர் மாலதி, மற்றும் போலி ஆவணங்கள் தயார் செய்து கொடுத்த டிரைவர் ஜான் ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

    இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட மருத்துவமனை, மருத்துவர்கள் ஊழியர்கள், நிர்வாகிகளிடம் போலீசார் மற்றும் மருத்துவ குழுவினர் விசாரணை நடத்தியுள்ளனர்.

    இதில் பாதிக்கப்பட்ட சிறுமி சித்தோடு அருகே உள்ள ஆர்.என்.புதூரில் உள்ள அரசு காப்பகத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளார். அங்கு தங்கி இருந்த சிறுமி கடந்த சில நாட்களுக்கு முன்பு மன உளைச்சல் காரணமாக கழிப்பறையை கழுவும் அமிலத்தை குடித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் ஏற்படுத்தியது.

    பின்னர் 2 நாள் சிகிச்சைக்கு பிறகு சிறுமி டிசார்ஜ் செய்யப்பட்டு மீண்டும் அதே காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டார்.

    இந்நிலையில் இந்த விவகாரத்தில் கைது செய்யப்பட்டு சிறுமியின் தாய், பெண் புரோக்கர் மாலதி ஆகியோர் கோவை மத்திய சிறையிலும், சிறுமியின் வளர்ப்பு தந்தை கோபி செட்டிபாளையத்தில் உள்ள மாவட்ட சிறையிலும், போலி ஆவணங்களை தயாரித்து கொடுத்த ஜான் ஈரோடு கிளை சிறையிலும் அடைக்கப்பட்டுள்ளனர்.

    இவர்களிடம் தனித்தனியே விசாரணை நடத்த அனுமதிக்க வேண்டும் என்று ஈரோடு மகிளா நீதிமன்றத்தில் தமிழக மருத்துவ பணிகள் இயக்குனரக அலுவலர்கள் மனு செய்தனர். இந்த மனு நீதிபதி முன் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி 4-ந் தேதி 4 பேரிடமும் சிறை விதிகளுக்கு உட்பட்டு விசாரித்து கொள்ள அனுமதி அளித்து உத்தரவிட்டார்.

    இந்த உத்தரவின்படி மருத்துவ குழு டாக்டர் விஸ்வநாதன் தலைமையில் நாளை (திங்கட்கிழமை) கோவை சிறையில் உள்ள சிறுமியின் தாய், பெண் புரோக்கர் மாலதியிடம் நேரடி விசாரணையில் ஈடுபட உள்ளனர்.

    இதேப்போல் ஈரோடு, கோபி சிறையில் உள்ள சிறுமியின் வளர்ப்பு தந்தை, டிரைவர் ஜான் ஆகியோரிடமும் தனித்தனியாக மருத்துவ குழுவினர் விசாரணை நடத்த உள்ளனர்.

    இந்த விசாரணையில் பல்வேறு பரபரப்பான தகவல்கள் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    • சிறுமி தான் எங்கு தங்க வேண்டும் என்று விரும்புகிறாரோ அது குறித்த தகவலை நீதிமன்றத்தில் அறிக்கையாக வழங்க அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.
    • சிறுமியின் தாய், வளர்ப்பு தந்தை, பெண் புரோக்கர் மாலதி, போலி ஆவணங்களை தயாரித்துக்கொடுத்த ஜான் ஆகியோர் தற்போது சிறையில் உள்ளனர்.

    ஈரோடு:

    ஈரோட்டில் 16 வயது சிறுமியின் கருமுட்டை விற்பனை செய்த விவகாரத்தில் சிறுமியின் தாய், வளர்ப்பு தந்தை, பெண் புரோக்கர் மாலதி, மற்றும் போலி ஆவணங்கள் தயார் செய்து கொடுத்த டிரைவர் ஜான் ஆகியோர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

    இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட மருத்துவமனை, மருத்துவர்கள், ஊழியர்கள், நிர்வாகிகளிடம் போலீசார் மற்றும் சென்னையை சேர்ந்த உயர்மட்ட மருத்துவ குழுவினர் விசாரணை நடத்தியுள்ளனர். தற்போது பாதிக்கப்பட்ட சிறுமி ஈரோடு, சித்தோடு அருகே உள்ள ஆர்.என்.புதூரில் உள்ள அரசு காப்பகத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளார்.

    அங்கு தங்கி இருந்த சிறுமி கடந்த சில நாட்களாக மன உளைச்சலில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. தன்னை பாட்டி வீட்டிற்கு அனுப்பி வைக்குமாறு அந்த சிறுமி வலியுறுத்தி வந்துள்ளார்.

    ஆனால் சட்ட சிக்கல் நிலவியதால் காப்பகத்திலேயே தொடர்ந்து சிறுமி தங்க வைக்கப்பட்டு இருந்தார். இந்நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு சிறுமி தான் கழிவறை சுத்தப்படுத்த பயன்படுத்தும் அமிலத்தை குடித்து தற்கொலைக்கு முயன்றார். இதனால் பதறிப்போன காப்பக ஊழியர்கள் உடனடியாக சிறுமியை ஈரோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

    இதையடுத்து அரசு மருத்துவமனையில் கடந்த 2 நாட்களாக சிறுமிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. சிறுமிக்கு அனைத்து வகையான பரிசோதனைகளும் செய்யப்பட்டன.

    இதையடுத்து சிறுமி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு மீண்டும் நேற்று காப்பகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டார். சிறுமி மன அழுத்தத்தில் உள்ளதால் அவருக்கு 'கவுன்சிலிங்' வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

    இன்னும் 2 நாளில் அவருக்கு 'கவுன்சிலிங்' வழங்கப்பட உள்ளது. அதில் சிறுமி தான் எங்கு தங்க வேண்டும் என்று விரும்புகிறாரோ அது குறித்த தகவலை நீதிமன்றத்தில் அறிக்கையாக வழங்க அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.

    இந்நிலையில் இந்த விவகாரத்தில் கைது செய்யப்பட்டுள்ள சிறுமியின் தாய், வளர்ப்பு தந்தை, பெண் புரோக்கர் மாலதி, போலி ஆவணங்களை தயாரித்துக்கொடுத்த ஜான் ஆகியோர் தற்போது சிறையில் உள்ளனர்.

    இதில் சிறுமியின் தாய், பெண் புரோக்கர் ஆகியோர் கோவை மத்திய சிறையிலும், சிறுமியின் வளர்ப்பு தந்தை கோபியில் உள்ள மாவட்ட சிறையிலும், போலி ஆவணங்களை தயாரித்து கொடுத்த ஜான் ஈரோடு கிளை சிறையிலும் உள்ளனர்.

    இவர்களிடம் தனித்தனியே விசாரணை நடத்த அனுமதிக்க வேண்டும் என்று ஈரோடு மகிளா நீதிமன்றத்தில் தமிழக மருத்துவ பணிகள் இயக்குனரக அலுவலர்கள் மனு செய்தனர். இந்த மனு நீதிபதி முன் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி வருகிற 4-ந் தேதி 4 பேரிடமும் சிறை விதிகளுக்கு உட்பட்டு விசாரித்துக்கொள்ள அனுமதி அளித்து உத்தரவிட்டார்.

    இந்த உத்தரவின்படி மருத்துவப் பணிகள் குழு வரும் 4-ந் தேதி தனித்தனியே அந்தந்த சிறையில் குழுக்களாக பிரிந்து நேரடி விசாரணையில் ஈடுபட உள்ளனர்.

    • வளர்ப்பு தந்தையால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டும் பல்வேறு ஆஸ்பத்திரிகளில் கருமுட்டை எடுக்கப்பட்டதாலும் கடந்த சில நாட்களாக சிறுமி மன உளைச்சலில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
    • மனமுடைந்த சிறுமி நேற்று முன்தினம் இரவு கழிப்பறை சுத்தம் செய்யும் அமிலத்தை குடித்து தற்கொலைக்கு முயன்றார்.

    ஈரோடு:

    ஈரோட்டில் 16 வயது சிறுமியிடம் கருமுட்டை எடுத்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும் சிறுமியின் வளர்ப்பு தந்தை அந்த சிறுமிக்கு பாலியல் ரீதியாக தொந்தரவு கொடுத்ததும் மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    இந்த விவகாரம் தொடர்பாக சிறுமியின் வாக்குமூலத்தின் அடிப்படையில் சிறுமியின் தாய், வளர்ப்பு தந்தை, புரோக்கர் மாலதி, போலி ஆவணங்களை தயாரித்துக் கொடுத்த ஜான் உள்பட 4 பேரை ஈரோடு சூரம்பட்டி போலீசார் போக்சோ உள்பட 9 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

    தொடர்ந்து சிறுமியின் கருமுட்டை பெற்ற ஈரோடு, பெருந்துறை, சேலம், ஓசூர், திருப்பதி, திருவனந்தபுரம் தனியார் மருத்துவமனையின் மருத்துவர்கள், ஊழியர்கள், நிர்வாகிகளிடம் ஈரோடு ஏ.டி.எஸ்.பி. கனகேஸ்வரி விசாரணை நடத்தினார்.

    இதேபோல் உயர்மட்ட மருத்துவ குழுவினரும் தனியார் மருத்துவமனைகளில் நேரடியாக ஆய்வு மேற்கொண்டு விசாரணை நடத்தினர்.

    மேலும் சம்பந்தப்பட்ட மருத்துவமனைக்கு சம்மன் அனுப்பி அவர்களிடமும் விசாரணை நடத்தினர். பாதிக்கப்பட்ட 16 வயது சிறுமி தற்போது ஈரோடு ஆர்.என். புதூர் அருகே உள்ள அரசு காப்பகத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளார்.

    இந்நிலையில் வளர்ப்பு தந்தையால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டும் பல்வேறு ஆஸ்பத்திரிகளில் கருமுட்டை எடுக்கப்பட்டதாலும் கடந்த சில நாட்களாக சிறுமி மன உளைச்சலில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

    காப்பகத்தில் அவர் யாரிடமும் பேசாமல் அமைதியாக இருந்து வந்துள்ளார். இந்த நிலையில் மனமுடைந்த சிறுமி நேற்று முன்தினம் இரவு கழிப்பறை சுத்தம் செய்யும் அமிலத்தை குடித்து தற்கொலைக்கு முயன்றார். மேலும் இதுகுறித்து சிறுமி காப்பக நிர்வாகிகளிடம் தெரிவித்தார்.

    இதையடுத்து சிறுமியை சிகிச்சைக்காக ஈரோடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்து சேர்த்தனர். அங்கு சிறுமிக்கு அனைத்து விதமான மருத்துவ பரிசோதனைகளும் செய்யப்பட்டன. இறுதியில் சிறுமிக்கு எந்த ஒரு பாதிப்பும் இல்லை எனவும், உயிருக்கு தீங்கு விளைவிக்கக்கூடிய எதுவும் அவரது வயிற்றில் இல்லை என உறுதி செய்யப்பட்டது.

    காப்பகத்தில் இருந்த சிறுமி தனது உறவினர் வீட்டுக்கு செல்ல ஆசைப்பட்டு உள்ளார். ஆனால் தற்போது வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது. மேலும் அவருக்கு பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை உள்ளதால் அவரை தொடர்ந்து காப்பகத்தில் இருக்குமாறு வலியுறுத்தியுள்ளனர். இதனால் சிறுமி மனமுடைந்து தற்கொலைக்கு முயன்று இருக்கலாம் என தகவல் வெளியானது.

    இதுகுறித்து ஈரோடு அரசு மருத்துவமனை டாக்டர்கள் கூறியதாவது:-

    தற்போது சிறுமி நலமாக உள்ளார். அவருக்கு எந்தவிதமான பிரச்சினையும் இல்லை. அவருக்கு சில கவுன்சிலிங் வழங்கப்பட்டுள்ளது.

    இன்று மீண்டும் சிறுமிக்கு சில மருத்துவ பரிசோதனைகள் செய்யப்பட உள்ளது. அது முடிந்ததும் இன்று மதியம் அல்லது மாலைக்குள் சிறுமி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு மீண்டும் காப்பத்துக்கு அழைத்து செல்லப்படுவார் என்றனர். சிறுமி சிறிதளவே அமிலத்தை குடித்ததால் உயிர் தப்பினார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • கருமுட்டை விவகாரத்தில் பாதிக்கப்பட்ட சிறுமி ஈரோடு ஆர்.என்.புதூரில் உள்ள அரசு காப்பகத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளார்.
    • அரசு காப்பகத்தில் தங்க வைக்கப்பட்டுள்ள சிறுமி யாரிடமும் சரியாக பேசாமல் தனக்கு ஏற்பட்ட நிலையை கருதி அமைதியாக இருந்து வந்தார்.

    ஈரோடு:

    ஈரோட்டை சேர்ந்த 16 வயது சிறுமியிடம் வலுக்கட்டாயமாக கருமுட்டை எடுத்த சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இதுதொடர்பாக சிறுமியின் தாய், வளர்ப்பு தந்தை மற்றும் பெண் புரோக்கர் மாலதி, போலி ஆவணங்கள் தயாரித்து கொடுத்த ஜான் ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

    கருமுட்டை விவகாரத்தில் பாதிக்கப்பட்ட சிறுமி ஈரோடு ஆர்.என்.புதூரில் உள்ள அரசு காப்பகத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளார். சிறுமியிடம் கருமுட்டை எடுத்தது தொடர்பாக உயர்மட்ட மருத்துவ குழுவினர் மற்றும் போலீசார் தனித்தனியாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

    அவர்கள் பாதிக்கப்பட்ட சிறுமி மற்றும் ஈரோடு, பெருந்துறை, சேலம், ஓசூர் மற்றும் திருப்பதி, திருவனந்தபுரம் பகுதிகளில் உள்ள தனியார் ஆஸ்பத்திரி நிர்வாகிகள் மற்றும் டாக்டர்களிடம் விசாரணை நடத்தினர்.

    மேலும் பெண் புரோக்கர் மாலதியை போலீசார் ஒரு நாள் காவலில் எடுத்து விசாரணை நடத்தினர். பின்னர் அவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார். இதுதொடர்பாக தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

    கருமுட்டை விவகாரத்தில் பாதிக்கப்பட்ட சிறுமி தனது வளர்ப்பு தந்தை மூலம் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார். மேலும் பல்வேறு ஆஸ்பத்திரிகளிலும் இவருக்கு வலுக்கட்டாயமாக கருமுட்டை எடுக்கப்பட்டுள்ளது.

    இதனால் அரசு காப்பகத்தில் தங்க வைக்கப்பட்டுள்ள சிறுமி மன உளைச்சலில் இருந்து வந்தார். யாரிடமும் சரியாக பேசாமல் தனக்கு ஏற்பட்ட நிலையை கருதி அமைதியாக இருந்து வந்தார்.

    இந்நிலையில் பெற்ற தாயே தனது வாழ்க்கையை சீரழித்ததால் மனம் உடைந்த சிறுமி தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார். அதன்படி இன்று காலை சிறுமி கழிவறை சுத்தம் செய்ய பயன்படுத்தும் அமிலத்தை (விஷம்) குடித்து மயங்கினார்.

    இதுபற்றி தெரிய வந்ததும் அதிர்ச்சி அடைந்த காப்பக நிர்வாகிகள் சிறுமியை மீட்டு ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்தனர். அங்கு சிறுமிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கருமுட்டை விவகாரத்தில் பாதிக்கப்பட்ட சிறுமி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • சிறுமியிடம் கருமுட்டை எடுத்த விவகாரத்தில் தொடர்புடைய மருத்துவமனைக்கு நேரடியாகச் சென்று விசாரணை நடத்தினர்.
    • சிறுமியின் தாய், வளர்ப்பு தந்தை ஆகியோரையும் காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் முடிவு செய்துள்ளனர்.

    ஈரோடு:

    ஈரோட்டில் 16 வயது சிறுமியின் கருமுட்டையை சட்டவிரோதமாக எடுத்தது தொடர்பாக சிறுமியின் தாய், வளர்ப்பு தந்தை பெண் புரோக்கர் மாலதி, போலி ஆவணங்கள் தயாரித்து கொடுத்த ஜான் ஆகிய 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    இந்த விவகாரத்தில் ஆரம்பம் முதலே ஒவ்வொரு நாளும் புதிய தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. பாதிக்கப்பட்ட சிறுமியிடம் ஏ.டி.எஸ்பி. கனகேஸ்வரி தலைமையிலான போலீசார், சென்னையை சேர்ந்த உயர்மட்ட மருத்துவ குழுவினர் என தனித்தனியாக விசாரணை நடத்தினர்.

    சிறுமியிடம் கருமுட்டை எடுத்த விவகாரத்தில் தொடர்புடைய மருத்துவமனைக்கு நேரடியாகச் சென்று விசாரணை நடத்தினர். இந்த விவகாரத்தில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி வருகிறது.

    இந்நிலையில் சிறுமியின் தாய், வளர்ப்பு தந்தை, பெண் புரோக்கர் மாலதி, ஜான் ஆகியோரின் காவல் முடிவடைந்ததால் அவர்களை மீண்டும் கோர்ட்டில் போலீசார் ஆஜர்படுத்தினர். அப்போது பெண் புரோக்கர் மாலதியை 5 நாள் காவலில் விசாரிக்க போலீசார் அனுமதி கேட்டனர்.

    ஆனால் நீதிமன்றம் ஒரு நாள் காவலில் விசாரிக்க அனுமதி அளித்தது. இதன்படி நேற்று முன்தினம் மாலை 4 மணி முதல் விடிய விடிய போலீசார் அவரிடம் விசாரணை நடத்தினர்.

    இதில் தனியார் ஆஸ்பத்திரியில் இருந்து அவரது வங்கி கணக்கில் எத்தனை முறை பண பரிமாற்றம் நடந்துள்ளது என்ற விவரங்களை சேகரித்தனர். எந்தெந்த நாட்களில் பண பரிமாற்றம் நடந்துள்ளது. சிறுமியை தவிர வேறு சில பெண்களை புரோக்கர் மாலதி மூளை சலவை செய்து கருமுட்டையை எடுத்து உள்ளாரா? என்பது குறித்து அவரிடம் விரிவாக விசாரணை நடத்தினர்.

    நேற்று மதியம் வரை பெண் புரோக்கர் மாலதியிடம் விசாரணை நடைபெற்றது. பின்னர் அவர் மருத்துவ பரிசோதனைக்கு அழைத்து செல்லப்பட்டு நீதிமன்றத்தில் மீண்டும் ஆஜர்படுத்தப்பட்டார். இதையடுத்து அவர் மீண்டும் கோவை சிறையில் அடைக்கப்பட்டார்.

    இந்நிலையில் சிறுமியின் தாய், வளர்ப்பு தந்தை ஆகியோரையும் காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் முடிவு செய்துள்ளனர்.

    பெண் புரோக்கர் மாலதியிடம் பெற்ற சில முக்கிய தகவலை அடிப்படையாக வைத்து சிறுமியின் தாய் மற்றும் வளர்ப்பு தந்தையிடம் விசாரணை நடத்தினால் மேலும் பல்வேறு தகவல் கிடைக்க வாய்ப்பு உள்ளதால் போலீசார் அவர்களை நீதிமன்ற காவலில் எடுத்து விசாரிக்க முடிவு செய்துள்ளனர்.

    இதற்காக வரும் திங்கட்கிழமை நீதிமன்றத்தில் 2 பேரையும் காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் மனு தாக்கல் செய்ய முடிவு செய்து உள்ளனர்.

    ×